Monday, February 14, 2011

தாய் உள்ளம்

உனக்காக ஐந்து திங்கள் பத்தியமிருந்தேன்
இன்றோ பசியால் வாடுகின்றேன்
உன்னை இன்றேடுக்க இடுப்புவலி பொறுத்தேன்
இன்றோ இடுப்பொடிந்து கிடக்கின்றேன்
ஒன்றல்ல இரண்டு மகன் இருந்தும்
இன்று அனாதையை இருக்கின்றேன்
உன்னை தாலாட்டி தூங்கவைத்தேன்
இன்றோ தனிமரமாய் துடிகின்றேன்
அன்பாக பத்தில் இருந்த என் மகன்
இன்றோ என்னை ஆதரிக்க மறுகின்றான்
உனக்காகவே நான் வாழ்ந்திருந்தேன்
இன்றோ வாழ வழில்லாமல் தவிக்கின்றேன்
நீ எங்கிருந்தாலும் நலமாய் வாழ
இன்றும் இறைவனை வேண்டுகின்றேன்
இப்படிக்கு
தாய்

No comments:

Post a Comment