Monday, February 14, 2011

காதலர் தினம்!!!

வருடத்தின் இந்த நாள்
மிக முக்கியமான நாள் !

அன்று பார்த்தேன் ,பழகினேன், நேசித்தேன்
இன்று வார்த்தையாக்கும் நாள் !

கண்ணோடு கண் பேச
காத்திருக்கும் நாள்!

கண்ணாடியில் உன்னைப்பற்றி பேசியதை
உன் முன்னே பேசும் நாள் !

கனவில் நடந்ததை எல்லாம்
நினைவாக்கும் நாள் !

பூவை ரசிக்கும் நான்
உன்னை ரசிக்கவைக்கும் நாள் !

நண்பனுக்கு மட்டும் தெரிந்த உண்மையை
உனக்கு தெரிவிக்கும் நாள் !

என் கவிதையை உனக்கு
வசிக்கும் நாள் !

இரண்டு உள்ளங்கள் மனம்விட்டு
பேசிக்கொள்ளும் நாள் !

உனக்கு நான் ,எனக்கு நீ என்று
பத்திரம் தீடிகொள்ளும் நாள் !

உனக்காக மட்டுமே நான் வாழ்வேன் என்று
உறுதிசெய்யும் நாள் !

என்னோடு உன்னை
சேர்த்துவைக்கும் உன்னதமான நாள் !

No comments:

Post a Comment