Thursday, February 17, 2011

என் பிறந்தநாள் ஆசைகள்


பிறருக்காக வாழவே -என்றும் 
என் உள்ளம் பக்குவபட வேண்டும் 

பணத்தின் மீது-எப்பொழுதும் 
பற்று இல்லாமல் இருக்கவேண்டும் 
இன்பத்தையும் துன்பத்தையும் -எந்தநாளும் 
சமமாக எண்ண வேண்டும்
மனது அளவிலும் -எவருக்கும் 
தீங்கு செய்யாமல் இருக்கவேண்டும்
ஆசையென்ற ஒன்று -எப்பொழுதும் 
பேராசையாகாமல் காக்க வேண்டும்
பிறர்மனதை புண்படுத்தாமல் - எந்தஒரு
காரியத்தையும் செய்ய வேண்டும்
விட்டுகொடுக்கும் எண்ணம் - என்றுமே 
மனதில் வளர வேண்டும்
துன்பத்திலும் பிறருக்காக - எந்தநேரத்திலும் 
உதவும் எண்ணம் வேண்டும்
கோபம் என்ற உணர்வு - எந்தசந்தர்பத்திலும் 
வெளிபடாமல் இருக்க வேண்டும்
மனதார மன்னிக்க  - என்றும் 
உள்ளம் நினைத்திட வேண்டும்
வெறுத்து ஒதுகுவோரையும் - எந்தநிலையிலும் 
நேசித்து இருக்க வேண்டும் 

இப்படி எல்லாவிதமான பக்குவம் - இறக்கும்வரை 
எனக்குள் நிலைத்திருக்க வேண்டும் 

No comments:

Post a Comment