அன்றோ புத்தகம்
சுமையாக தோன்றியது-இன்றோ
சுமந்து செல்ல ஆசைபடுகின்றோம்
வீட்டுபாடம் எழுதி எழுதி
கை வலித்தது -இன்றோ
எழுதுவதே இல்லை
விடுமுறைக்கு காத்திருந்தோம்
விளையாடி களிப்பதற்கு-இன்றோ
விளையாட நேரம் இல்லை
பெற்றோரை எதிரித்து ஒருநாளும்
பேசியதில்லை -இன்றோ
எதிர்வாதம் செய்கின்றோம்
நண்பன் , பகைவன் பாகுபாடு
தோன்றவில்லை -இன்றோ
பொறாமை வளர்கிறது
சேமிப்பு இல்லாதவரை
சந்தோசமாக இருந்தோம் -இன்றோ
சேமிப்பதற்காக சந்தோசம் இழந்தோம்
பெரிதாக எதையும்
ஆசைப்படவில்லை -இன்றோ
பேராசை படுகின்றோம்
தாயை தங்கையை தவிர
பெண்ணொன்று தெரியாது -இன்றோ
காதலி என்று சொல்கின்றோம்
கவலைகள் இல்லாமல்
சுற்றி திரிந்தோம் -இன்றோ
கவலைபட்டே காலம் கழிக்கிறோம்
எந்த நேரத்திலும்
மகிழ்ச்சியாய் இருந்தோம் -இன்றோ
மகிழ்சியை தேடுகின்றோம்
இன்னொருமுறை பள்ளி பருவத்தை
திருப்பி தருவாயா இறைவா-இன்றும்
மனம் ஏங்குகிறது !!!

No comments:
Post a Comment