Wednesday, February 16, 2011

மீண்டும் வேண்டும் பள்ளி பருவம்

அன்றோ புத்தகம்
சுமையாக தோன்றியது-இன்றோ
சுமந்து செல்ல ஆசைபடுகின்றோம்

வீட்டுபாடம் எழுதி எழுதி
கை வலித்தது -இன்றோ
எழுதுவதே இல்லை

விடுமுறைக்கு காத்திருந்தோம்
விளையாடி களிப்பதற்கு-இன்றோ
விளையாட நேரம் இல்லை 

பெற்றோரை எதிரித்து ஒருநாளும்
பேசியதில்லை -இன்றோ
எதிர்வாதம் செய்கின்றோம்

நண்பன் , பகைவன் பாகுபாடு
தோன்றவில்லை -இன்றோ
பொறாமை வளர்கிறது

சேமிப்பு இல்லாதவரை
சந்தோசமாக இருந்தோம் -இன்றோ
சேமிப்பதற்காக சந்தோசம் இழந்தோம்

பெரிதாக எதையும்
ஆசைப்படவில்லை -இன்றோ
பேராசை படுகின்றோம்

தாயை தங்கையை தவிர
பெண்ணொன்று தெரியாது -இன்றோ
காதலி என்று சொல்கின்றோம்

கவலைகள் இல்லாமல்
சுற்றி திரிந்தோம் -இன்றோ
கவலைபட்டே காலம் கழிக்கிறோம்

எந்த நேரத்திலும்
மகிழ்ச்சியாய் இருந்தோம் -இன்றோ
மகிழ்சியை தேடுகின்றோம்

இன்னொருமுறை பள்ளி பருவத்தை
திருப்பி தருவாயா இறைவா-இன்றும்   
மனம் ஏங்குகிறது !!!

No comments:

Post a Comment