பாலூட்டி சீராட்டி
வளர்த்தவள் அங்கே
நானோ பிழைப்பதற்காக
வந்தேன் இங்கே !
மடியில் வைத்து
தாலாட்டினாள் அங்கே
மறந்து விட்டே
வாழ்கிறேன் இங்கே !
பிசைந்து கொடுத்து
உணவூடினால் அங்கே
சிலநேரம் உண்ணாமல்
உழைக்கிறேன் இங்கே !
கண் விழித்து
பார்த்துகொண்டாள் அங்கே
கண்டுகொள்ள யாருமில்லாமல்
தவிக்கிறேன் இங்கே !
துன்பத்திலும் இன்பம்
தந்தாள் அங்கே
இன்பத்திலும் துன்பம்
தான் இங்கே !
பார்க்க நினைத்து
காத்திருக்கிறாள் அங்கே
தாழாத தனிமையில்
தத்தளிக்கிறேன் இங்கே !
உருவாக்கிய உள்ளம்
இருப்பதோ அங்கே
உருகுகின்ற மெழுகை
போல நான் இங்கே !
நினைத்து கொண்டு
வாழ்கிறாள் அங்கே
நினைவெல்லாம் நீமட்டும்தான்
அம்மா இங்கே !!!
வளர்த்தவள் அங்கே
நானோ பிழைப்பதற்காக
வந்தேன் இங்கே !
மடியில் வைத்து
தாலாட்டினாள் அங்கே
மறந்து விட்டே
வாழ்கிறேன் இங்கே !
பிசைந்து கொடுத்து
உணவூடினால் அங்கே
சிலநேரம் உண்ணாமல்
உழைக்கிறேன் இங்கே !
கண் விழித்து
பார்த்துகொண்டாள் அங்கே
கண்டுகொள்ள யாருமில்லாமல்
தவிக்கிறேன் இங்கே !
துன்பத்திலும் இன்பம்
தந்தாள் அங்கே
இன்பத்திலும் துன்பம்
தான் இங்கே !
பார்க்க நினைத்து
காத்திருக்கிறாள் அங்கே
தாழாத தனிமையில்
தத்தளிக்கிறேன் இங்கே !
உருவாக்கிய உள்ளம்
இருப்பதோ அங்கே
உருகுகின்ற மெழுகை
போல நான் இங்கே !
நினைத்து கொண்டு
வாழ்கிறாள் அங்கே
நினைவெல்லாம் நீமட்டும்தான்
அம்மா இங்கே !!!
No comments:
Post a Comment